௨
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துணை
சில நிஜங்கள் ............சில நியாயங்கள் ...
ஆட்டோகாரனுக்கு பணத்தை எண்ணி கொடுத்து விட்டு , லக்கேஜ்களுடன் கிருத்திகா ஆட்டோவிலிருந்து இறங்கியபோது , அந்த ' அபார்ட்மெண்டின் ' வாட்ச்மேன் குப்தா அவளை நோக்கி மூச்சிரைக்க ஓடி வந்தான் ;
'' ஆயியே பெகன்ஜி ...... பாய் சாப் ஆபீஸ் சலா கயா......சாவி மேரே பாஸ் ஹே ....''
என்றவாறு வீட்டு சாவியை அவளிடம் நீட்டினான் அவன் ;
மறுகணம் அவளது முகம் ஏமாற்றத்தில் சுருங்கி போனது ; உள்ளுக்குள் பொங்கி வந்த எரிச்சலை வெளிக்காட்டாமல் அவனிடமிருந்து சாவியைப் பெற்றுக் கொண்டு, லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அவள் ; முதல் தளத்தில் அமைந்திருந்த தனது ப்ளாட்டை திறந்து உள்ளே சோபாவில் ' பொத்' தென்று விழுந்தவள் , ஆயாசத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்; கணவன் சிவராம் ஸ்டேஷனுக்கு வருவதாய் சொல்லி விட்டு வராமலேயே இருந்து விட்ட ஏமாற்றம் , இப்போது கோபமாய் உருமாற ........பிரயாண அசதியும் உடன் சேர்ந்து கொள்ள ...லேசாய் தலையை வலிக்கத் துவங்கியது அவளுக்கு இப்போது !...கூடப் பிறந்த அண்ணனின் திருமண நிச்சயதார்த்த விழாவை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோயமுத்தூர் சென்றிருந்தவள் , நேற்று இரவு அங்கிருந்து கிளம்பி சற்று முன்பு தான் வந்திருந்தாள் ;
சுவர் கடிகாரம் காலை மணி ஒன்பது என்று அறிவிக்க ....சூடாய் காபி சாப்பிட வேண்டும்போலிருந்தது அவளுக்கு ; தளர்ந்த நடையுடன் சோபாவிலிருந்து எழுந்து கொண்ட கிருத்திகா, பின் நேராக வாஷ்பேசினுக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்; ..கறை படிந்திருந்த கேஸ் ஸ்டவ் ...சிங்கில் அம்பாரமாய் குவிந்து கிடக்கும் பாத்திரங்கள் .... ஆங்காங்கே இறைந்து கிடக்கும் ...வாட்டர் பாட்டில்கள் ...இப்படி ஒவ்வொன்றாய் அவள் பார்வையில் பட ...மனதிற்குள் பொருமியவாறே ப்ரிட்ஜைத் திறந்து பால் பக்கெட்டை எடுத்தாள் அவள் ;
' ச்சே ...என்ன மனிதர் ....ஒரு நாலு நாள் நான் ஊரில் இல்லாவிட்டால் இந்த அளவிற்கு அலங்கோலமாகவா வீட்டை வைத்துக் கொள்வது ' ...உள்ளுக்குள் அங்கலாய்த்தவாறே காபியைக் கலந்து கோப்பைக்குள் நிரப்பிக் கொண்டு அவள் ஹாலுக்கு வந்த போது செல்போன் அலறியது !...காப்பிக் கோப்பையை டீப்பாயில் வைத்து விட்டு , செல்போனைக் காதில் பொருத்திக் கொண்டாள் அவள் ; மறு முனையில் கணவன் சிவராமின் உற்சாகக் குரல் !
'' ஹாய் குண்டூஸ் ! ...எங்க இருக்கே?''
மறு கணம் கோபத்தில் படபடத்தாள் அவள்;
'' ஸ்டேஷனிலே!
....... உங்களுக்காகத் தான் ஒன் அவராய் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன் !...எப்போ வரீங்க ?...'' அவளின் வார்த்தைகளை நிஜம் என்று நம்பிய சிவராம் மறு முனையில் ஆதங்கத்தில் பட படத்தான் ; .....
'' ஒ காட் ...ஸ்டேஷனிலா இருக்கே ?..... வெரி சாரிடா கிருத்தி !..என்னால இப்போ அங்கே வர முடியாதுடா கண்ணம்மா ....ஏன்னா இப்போ நான் ஆபீஸ்ல இருக்கேன் !.........!....ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போயிடேன் ப்ளீஸ் !....என் கண்ணு இல்ல ..''....அவன் தவிப்பையும் , கெஞ்சலையும் உள்ளூர ரசித்தாள் அவள் ; பின் படு சீரியசான தொனியில் , ,
....'' ஊஹூம் ....மாட்டேன் ஷிவா !....எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம் இல்ல ?'' காப்பியை உறிஞ்சியவாறே ..வேண்டுமென்றே சீண்டினாள் அவனை ;
பதிலுக்கு அவளை சமாதானப் படுத்தும் விதமாய் , குரலை அதிகம் உயர்த்தாமல் அவன் ,
'' ப்ளீஸ் ..கிருத்தி !.........நா சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாய் கேளேன் !.....இன்னிக்கு சாட்டர்டே தானே !.. ஆக்சுவலி , ..ஐயாவோட பிளான் ...என்ன தெரியுமா ?..ஸ்டேஷனிலேருந்து உன்னை அழைச்சுட்டு வந்ததும் ......வீட்ல .'' ஹாயாய் '' ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு ...........அப்புறம் நிதானமாய் குளிச்சுட்டு ....ஹோட்டல் சரவணா போய் நாம ரெண்டு பெரும் லஞ்ச் சாப்பிடலாம்னு !.......ஹூம் .என்ன பண்றதுடா செல்லம் !.... ,,எல்லாம் ஸ்பாயில் ஆயிடுச்சு !கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாம நேத்து நைட் எங்க எம் .டி எனக்கு ' கால் ' பண்ணி என்னை இன்னிக்கு ஆபிசுக்கு வரச் சொல்லிட்டாரும்மா !....காலையில எட்டு மணிக்கே ஆபீஸ் வந்துட்டேன் !...என்னால ஸ்டேஷனுக்கு வர முடியாதுங்கற விஷயத்தை உன் கிட்ட சொல்லலாம்னு , உன்னோட மொபைலுக்கு காண்டாக்ட் பண்ணினேன் !...பட் , நீ ட்ரைன்ல இருந்ததால உனக்கு சிக்னல் கிடைக்கலை போல இருக்கு ! !....எஸ் ...சீரியசாய்மா !.........எம் .டி யோட ஒரு முக்கியமான மீட்டிங்க்ல இருந்ததால , இத்தனை நேரம் மொபிலை ஆப் பண்ணி வெச்சிருந்தேன் !....இப்ப தான் மீட்டிங் முடிஞ்சது !...ஆனா இன்னும் வொர்க் முடியலை !....இன்னும் ரெண்டு கிளையண்ட்ஸ் வேற வருவாங்க !....அநேகமா நைட் தான் வீட்டுக்கு வருவேன் ! !.....ச்சே !....பேசாம இந்த வேலைய ரிசைன் பண்ணிடலாம்னு கூட தோணுது !...லீவு நாளில கூட மனுஷனை ஜாலியாய் இருக்க விடாம !.....என்ன லைப் !......ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ச்டன்ட் மீ கண்ணம்மா .''....'' ..கெஞ்சுகிற தொனியில் பேசினான் அவன் ;
சிவராம் ஐ ,ஐ .டி யில் கம்ப்யூட்டர் படித்து விட்டு , மிகப் பிரபலமான கம்ப்யூட்டர் கம்பெனியொன்றில் பொறுப்பான பதவி வகிப்பவன் ; அவனுடைய சிரமம் கிருத்திகாவிற்கும் புரியாமலில்லை ; இருந்தாலும் மணமாகி நான்கே மாதங்கள் ஆகியிருந்த நிலையில் , விடுமுறை நாட்களைக் கூட விட்டு வைக்காமல் ..சதா சர்வ காலமும் ,வேலை வேலை என்று ஆபீசே கதி என்று அவன் பழியாய்க் கிடப்பது அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தியது ! ....அதிலும் .... கூடப் பிறந்த அண்ணனின் நிச்சயதார்த்த விழாவிற்கு கூட , வர முடியாமல் தான் மட்டும் போய் விட்டு வந்தது அவளது எரிச்சலை இரட்டிப்பாக்கியது ! .....பாவம் அவளும் ஆசாபாசங்கள் நிறைந்த சராசரி பெண் தானே ?
'' என்ன ஷிவா நீங்க !.....பொழுதன்னிக்கும் ஆபீஸ் ...எம் .டி .....அப்புறம் மீட்டிங் ....எப்ப பாரு .இதயே சொல்லுங்க !.....ஹூம் ..நீங்க ஸ்டேஷனுக்கு வந்திருப்பீங்கனு ஆசை ஆசையாய் எதிர்பார்த்து , ஏமாந்தது தான் மிச்சம் !....நீங்க தூங்கிட்டிங்களோனு நெனச்சு , ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்து பாத்தா , நீங்க ஆபீஸ் போயிருக்கரதாய் சொல்லி வாட்ச்மேன் குப்தா, வீட்டு சாவியை எடுத்து நீட்டறான் .....!'' அவளை மேற்கொண்டு பேச விடவில்லை சிவராம் ; உற்சாகமும் , படபடப்புமாய் ,
'' குட் .....அப்போ வீட்ல தான் இருக்கியா ?....சோ ச்வீட் !.......'' அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே , எம் .டி இடமிருந்து அழைப்பு வர ......'படக் ' கென்று ..மொபைலை ஆப் செய்து விட்டு ஓட்டமும் , நடையுமாய் எம். டி அறையை நோக்கி விரைந்தான் அவன் ; காலிக் கோப்பையை சிங்கில் போட்டு விட்டு , ....வாட்ச்மேன் குப்தாவிடம் சொல்லி வேலைக் காரி சரோஜாவை அழைத்து வரச் சொல்லலாம் என்று எண்ணியவாறே கிச்சனிலிருந்து வெளியே வந்தவளுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது சரோஜா ஒரு வாரம் லீவு போட்டு விட்டு மதுரை சென்றிருந்தது !..நாளை மறுநாள் தான் வருவாள் !.....மனச்சோர்வும் , உடல் அழர்ச்சியும் ..அவளை ஆட்கொள்ள சோபாவில் ஆயாசத்துடன் சாய்ந்து கொண்ட அக்கணம்............ மொபைல் அலறியது !..... சுவிட்சை ஆன் செய்தவள் , அடுத்த கணம் சந்தோஷத்துக்கு தாவினாள்!....மறு முனையில் அவளது ஆருயிர் தோழி மதுவின் குரல் !
.............................. ........'' ஹாய் கிருத்தி !.....எப்டியிருக்கே ?...''
.............................. .......'' சூப்பராயிருக்கேன் !....வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ் !....ரொம்ப நாளாச்சு உன் கூட பேசி !....எப்டியிருக்கே மது !''
.............................. ......'' ம்ம் ....நாட் ஸோ பேட் !....ஆமா ....நீ இப்போ எங்க இருக்கே ? '' மதுவின் குரலில் சுரத்தில்லை ;
'' வீட்ல தான் ! ஏன் கேக்கறே !''
'' கொஞ்சம் பேசணும்பா !...ஆர் யூ ப்ரீ நவ் ''?
'' யா ..என் ஹஸ்பன்ட் ஷிவா கூட வீட்ல இல்ல !...ஆபீஸ் போயிருக்கார் !.....நீ தாராளமாய் வா '' !
'' ஒகே ....நா இப்போ சிட்டி சென்டர்ல இருக்கேன் !......இன்னும் த்ரீ அவர்ஸ்ல அங்கே இருப்பேன் !.....பை''
அவளது வருகை அவள் மனதில் ஒரு புறம் மகிழ்ச்சியை அளித்தாலும் ....கூடவே கொஞ்சம் குழப்பத்தையும் உண்டு பண்ணியது !.....' என்னவாக இருக்கும் ?' ஒரு கணம் .
யோசித்தவள் ......பின் சுறுசுறுப்புக்குத் தாவினாள் !...!!........................ ..........
' மளமள ' வென்று வீட்டைப் பெருக்கி , சுத்தம் செய்து ......வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு விட்டு .....பாத்திரங்களைத் தேய்த்து ......அடுப்பு துடைத்து ....இரவு உணவுக்குத் தேவையான காய் கறிகளை பிரிட்ஜிலிருந்து எடுத்து நறுக்கி முடித்து விட்டு ....சிவராமுக்குப் பிடித்த ஆலு சப்பாத்தியும் , வெஜிடபுள் பனீர் மசாலாவும் செய்து டைனிங் டேபிளில் வைத்து மூடிவிட்டு .........வேலை செய்த அலுப்பு தீர குளித்து முடித்து விட்டு வந்த போது மணி பதிநோன்றரையை நெருங்கியிருந்தது !....கிச்சனுக்குள் நுழைந்த கிருத்திகா பிரிட்ஜைத் திறந்து '' ஜிலென்று ' கூலட்ரிங்க் ''பாட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு ஹாலுக்குப் பிரவேசித்த அக்கணம் ...............
'' ட்ரிங் ...ட்ரிங் ....''
வாசலில் பெல் அழைக்க ....உற்சாகத்துடன் கதவைத் திறந்தவள் மறுகணம் சந்தோஷத்தில் முகம் மலர்ந்தாள் !.....எதிரே புன்னகையுடன் நின்றிருந்தாள் அவளது ஆருயிர்த் தோழி , மது ! அந்த நீல நிற ஜீன்ஸ் , ஒய்ட் கலர் டி . ஷர்ட் அவளுக்கு வெகு பாந்தமாக இருந்தது ! ; ' பம்' மென்று பரந்த கூந்தலை ' கிளிப் ' போட்டு அடக்கியிருந்தாள் அவள் ;
'' ஹேய் மது !...உனக்காகத் தான் காத்துக்கிட்டிருக்கேன் !.......வாடி உள்ளே !'' சுவாதீனமாய் அவள் கரங்களைப் பற்றியவாறு ....முகம் மலர அவளை வரவேற்றாள் கிருத்திகா ; .......எப்போதும் ' கல கல ' வென்று சிரித்துப் பேசிக் கொண்டு, துயரத்துக்கும் தனக்கும் வெகு தூரம் என்கிற மாதிரி இருப்பவள் மது ; ஆனால் கிருத்திகாவோ அவளுக்கு நேரெதிர் ! ....படு மூடி டைப் ; எவரிடமும் அத்தனை சுலபத்தில் பேசி விட மாட்டாள் ; கல்லூரி நாட்களில் மதுவிடம் மட்டும் சற்று நெருக்கம் உண்டு அவளுக்கு ; பட்டப் படிப்பு முடிந்த கையுடன் , கிருத்திகாவுக்கு திருமணம் முடிந்து விட ........மதுவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை ; மின் விசிறியை வேகமாக சுழல விட்டவாறே , கிருத்திகா ,
'' மேடம் ரொம்ப பிசி போல இருக்கு .....என் கல்யாணத்துக்குக் கூட வராம இருந்துட்டிங்க? . ''...'..பளிச் ' சென்று கண்ணடித்து , விகல்பமின்றி சிரித்த
வளுக்கு புன்னகையுடன் பதிலளித்தாள் மது ;
''....................'' வெரி சாரி கிருத்தி !...உன் கல்யாணத்தின் போது நான் ஊர்லையே இல்லடி !...கல்கத்தாவிலே இருக்கற எங்க அத்தை வீட்டுக்குன்னா போயிருந்தேன் ?......போன வாரம் தான் இங்கே வந்தேன் !.....அது போகட்டும் !...எப்டியிருக்கு உன் மேரீட் லைப் ?....'' கேட்ட மதுவுக்கு உற்சாகமாய் பதிலளித்தாள் கிருத்திகா ;
'' சூப்பர் !.....ஷிவா அநியாயத்துக்கு நல்லவர் தெரியுமா ?!..ரொம்ப ஹாப்பியாய் இருக்கேன் !....அநேகமாய் அடுத்த மாசம் அவர் , பிராஜக்ட் வேலையாய் யு .எஸ் போனாலும் போவார்!...ரெண்டு வருஷமாகும் இங்க வர !....''
'' அப்டீன்னா நீ ?'' புருவம் முடிச்சிடக் கேட்டவளுக்கு புன்னகையுடன் பதிலளித்தாள் கிருத்திகா ;
'' ரெண்டு பேரும் தான் !......!... நெக்ஸ்ட் மந்த் எங்க அண்ணாவோட கல்யாணம் !.....அது முடிஞ்ச கையோட நாங்க ரெண்டு பேரும் யு . எஸ் கெளம்பறோம் ! ....எங்கேஜ்மென்ட் முடிஞ்சு இன்னி காலையில தான் கோம்புத்துர்லேருந்து வந்தேன் !...அது போகட்டும் !...நீ எப்போ கல்யாண சாப்பாடு போடப் போறே?''
மறு கணம் மதுவின் முகத்தில் வாட்டம் !
..''...கிருத்தி!... அது விஷயமாய் நான் உன் கிட்ட கொஞ்சம் மனம் விட்டுப் பேசணும்டி ''!....
''ஷ்யூர் ....!..ஒன் மினிட் மது !...உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன் !'' பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றவள் , அடுத்த ஐந்தாவது நிமிடம் .மணக்க , மணக்க ஏலக்காய் டீ சகிதம் அவளெதிரே அமர்ந்து கொண்டாள் ;
'' இந்தா !..முதல்ல ..சூடாய் டீ சாப்பிடு !.....மது !....ஷிவா இப்போதைக்கு வர மாட்டார் !....இப் யூ டோன்ட் மைன்ட் நாம ரெண்டு பேரும் பக்கத்தில இருக்கிற பார்க்குக்குப் போகலாமா ? ''....................
அடுத்த ஐந்தாவது நிமிடம் இருவரும் பார்க்கில் இருந்தார்கள் ; அன்று ' சாட்டர்டே ஆதலால் பார்க்கில் ஏகத்துக்கு கூட்டம் ; ஒரு ஒதுக்கு புறமான இடமாக பார்த்து இருவரும் அமர்ந்து கொண்டார்கள் ;
தலையைக் குனிந்தவாறு மணலை அளைந்தபடி எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கும் மதுவை கிருத்தியின் குரல் உலுக்கிப் போட்டது !
'' ஏய் மது !.....எந்த கோட்டையைப் பிடிக்க இந்த பலமான யோசனை ?''
மறு கணம் அவளை நிமிர்ந்து பார்த்து சுவாரஸ்யமின்றி சிரித்தாள் மது ;
'' ம்ம்ம்....வர்ற சண்டேயை பத்தி தான் யோசிச்சுக்கிட்டிருக்கேன் !''
'' அன்னிக்கு என்ன ?''
'' அன்னிக்கு தாண்டி என்னைப் பெண் பாக்க வராங்க ......பையன் பேரு குமார் !.....ஊரு மதுரை ! ''
'' வாவ் ...சூப்பர் !...''
'' ஆனா எனக்கு இதுல துளி கூட இஷ்டம் இல்லடி !...''
'' ஏன்..?''
..'' ஷேகர் ன்னு ஒருத்தர்! ....கல்கத்தாவிலே இருக்கார் ! !......அவர் ஒரு பிசியோதேரப்பிஸ்ட் ! நான் கல்கத்தாவிலே இருந்த போது அத்தைக்கு
' தெரப்பி ' ட்ரீட்மென்டிற்காக அடிக்கடி அவர் எங்க அத்தை வீட்டுக்கு வர ......நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்சானோம்!....நாளடைவில் அதுவே ..காதலாய் உருவாயிடுச்சு ! .....ஷேகர் ஒரு பக்கா ஜென்ட்ல்மென் தெரியுமா!....மென் ஆப் குட் குவாளிட்டியிஸ் !....இந்த நாலு மாச பழக்கத்துல அவரோட நகக் கணு கூட ஏன் மேல பட்டதில்லை தெரியுமா ? .......அத்தனை டீசன்ட் !'' '
'' அப்பா அம்மா கிட்ட சொல்ல வேண்டியது தானே அவரைப் பத்தி ? '' 'கிருத்திகா இயல்பாய் கேட்டாள்;
' பிரச்சனையே அங்கே தான் ஆரம்பம் !.....ஏன்னா அவங்க ரெண்டு பேரும் ரொம்ப கண்டிப்பான பேர்வழிகள் !....அங்கே நிக்காதே ...இங்கே நிக்காதே ......சுரிதாருக்கு மேல ..துப்பட்டா இல்லாம வெளியே போனா குத்தம் ......வெளியில போய்ட்டு கொஞ்சம் லேட்டாய் வந்தால் ஏன் லேட்டு....எதுக்கு லேட்டுன்னு ஆயிரம் கொஸ்டின்ஸ் !.....இவளவு ஏன் !.....நான் கல்கத்தாவிலே எங்க அத்தை வீட்ல இருக்கும்போது ..தினமும் போன் பண்ணி ஜாக்கிரதியாயிறுநு ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது என்கூட பேசுவாங்க !.....ஹூம் ..மூச்சுக்கு முன்னூறு அட்வைஸ் !.....அநியாயத்துக்கு ரொம்ப பழமையிலே ஊறிப் போனவுங்க !.....நான் ஷேகர் விஷயத்தை அவங்ககிட்ட சொன்னா கண்டிப்பாய் எங்க வீட்ல ஒரு பூகம்பமே வெடிக்கும் !..அவங்களோட பத்தாம்பசலித்தனமான கொள்கைகளை விட்டு அவங்களும் கண்டிப்பாய் இறங்கி வர மாட்டாங்க !......ஆனா அவங்களுக்காக நானும் என்னோட காதலை இழக்க தயாராயில்லை !என்ன ஆனாலும் ஷேகர் தான் என்னோட கணவர் !!....நாங்க ரெண்டு பேரும் ...எங்கேயாவது கண் காணாத இடத்துக்குப் போய் கல்யாணம் பண்ணிட்டு வாழரதத் தவிர வேற வழியே தெரியலைப்பா எனக்கு !''.......படபடவென்று பொரிந்து தள்ளியவளின் இடையே குறுக்கிட்டாள் கிருத்திகா ;
'' ரிலேக்ஸ் மது !......ஸோ நீ அந்த ஷேகரோட ஓடிப் போர தாய் டிஸைட் பண்ணிட்டே ?...ரைட் ?..''
'' பட் ...ஒரு சின்ன திருத்தம் !....என்னோட எதிர்காலத்தை நானே நிர்ணயிச்சுக்கரதாய் டிஸைட் பண்ணிட்டேனு சொல்றது தான் கரெக்ட் !.....ஆமா .....?என்னோட மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையைத் தேடித் போறதுக்குப் பேர் ' ஓடிப்போரதுன்னு ' அர்த்தமா என்ன ?.......சர்டான்லி நாட் !.கிருத்தி !.....ஐ வான்ட் டு க்ளீயர் ஒன் திங் !....ஷேகர் மேல எனக்கு இருக்கற அளவுக்கதிகமான காதல்ங்கறதை விட .....என்னைப் பெத்தவங்களோட அந்த ' டாமினேட்டிங் ' பீகேவியர் தான் என்னை இப்படி வெறுப்பாய் பேச வைக்குது ! ... ச்சே ..காலத்துக்கேத்தார் போன்று இளைய தலை முறையினரை அனுசரிச்சுண்டு போற மனப் பக்குவம் அவங்களுக்கு துளி கூட கிடையாது !. அவங்களோட பீலிங்க்ஸ்களுக்கு மதிப்பே தருவது கிடையாது ! ஸோ ,என்னோட இந்த அதிரடியான முடிவு மூலம் ....என்னோட இன்டிவிசுவாலிட்டியை 'ப்ருவ் ' பண்ணினா மாதிரியுமாச்சு !...என்னோட மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை நானே தேடிக்கிட்டா மாதிரியுமாச்சு !..எனக்கு இதத் தவிர வேறு வழி தெரியலைப்பா ! ''
எண்ணையில் விழுந்த கடுகாய் படபடவென்று பொரிந்தாள் மது ; மறு கணம் வாய் விட்டு சிரித்தாள் கிருத்திகா;
'' கூல் மது !.......நவ் ஐயம் வெரி கிளியர் ! ......டு பி பிராங்க் , ...நீ உன்னோட பெற்றோர்களைப் பழி வாங்கரதாய் நெனச்சுக் கிட்டு உன்னை நீயே ஏமாத்திக்கரே !....அது தான் உண்மை !.யூ நோ மது !.... அவங்க உன் மீது காட்டுவது ஆத்மார்த்தமான அன்புமா !....ஆளுமைத்தன்மை இல்லை !.. அவங்களுக்கு ...உன் மீது கரிசனமும் அக்கறையும் நிறையவே இருக்கு !...ஆனா என்ன ஒண்ணு! ...அதுல கண்டிப்பும் , கறாரும் கொஞ்சம் துக்கலாவே இருக்கு !..வயசுப் பொண்ணு வழி தவறிப் போய் விடக் கூடாதேங்கற வாஞ்சை நிறையவே இருக்கு !!...மது ! ...
...... ...உன்னோட மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கைத் தேடிப் போறதாய் நீ நெனைக்கிறே !.... ஆனா , இந்த ஊர் , உலகத்தோட பார்வையில் நீ '' ஓடிப்போனவள் ''தான் !....ஓடிப் போனவளோட அப்பா, அம்மாநு தான் அவங்களுக்கு பேரு ! ! அது அவங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம் ? நா தான் தெரியாம கேக்கறேன் ...தப்பு பண்றது நீ !...தண்டனை அவங்களுக்கா ?......எதற்காக அவங்களுக்கு இந்த தண்டனை ?.....உன்னை பெத்து வளர்த்து ஆளாக்கி உன் மீது கலப்படமற்ற 'அக்மார்க் ' அன்பு செலுத்தியதற்காகவா?...அதுக்காக ' காதல்' ங்கறது தப்பான வார்தைன்னோ ....' காதலிக்கிறது தப்பான செயல்னோ சொல்ல வரலை !.....முடிஞ்ச வரைப் போராடிப் பார்த்துட்டு .....ஜெயிக்கலைன்னா ..போராடினோம்ங்கர திருப்தியாவது கிடைக்கும் இல்லையா?........இளமை மதமதப்பில்... பின் விளைவுகளை யோசிக்காமல் நாம செய்யற காரியங்கள் பிற்பாடு நமக்கே பல இன்னல்களை உருவாக்கும் !.......இருபதுகளில் ஒரு வகை வாழ்க்கை வாழ்ந்துட்டு அப்புறம் அறுபதுகளில் அதை நெனச்சு வருத்தப் படருதுல எந்த பிரயோஜனமும் இல்லை ! மது !...பாசிட்டீவாய் திங்க்...பண்ணுப்பா !.உங்க அப்பா ,அம்மா கிட்ட மனம் விட்டு பேசு !.....கண்டிப்பாய் ஒரு நல்ல வழி பிறக்கும்..எதுவுமே நாம அப்ப்ரோச் பண்ற விதத்தில தாம்ப்பா இருக்கு !.''
..கிருத்திகா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் , மதுவின் மனதில் பம்பரமாய்ச் சுற்றி சுற்றி சுழன்று கொண்டிருக்க .....ஒரு விதத்தில் அவள் கூறுவது நியாயம் என்று கூட பட்டது அவளுக்கு; அப்போது சிவராமிடமிருந்து போன் வரவே இருவரும் வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.
அன்று வெள்ளிக்கிழமை ; பகல் சாப்பாட்டிற்கு பின் டி.வி சீரியலுடன் ஒன்றிப் போயிருந்த கிருத்திகா, செல்போனின் அலறலுக்கு செவி சாய்க்கும் விதமாய் அதனை எடுத்து காதில் பொருத்திக் கொண்டாள் ; மறு முனையில் மதுவின் அட்டகாசமான குரல் !
'' ஹாய் டீச்சரம்மா .....வர்ற சண்டே என்னை பொண்ணு பாக்க வராங்க !....நீயும் என் கூட இருக்கணும் !''
''ஷ்யூர் .!...'' சந்தோஷமாய் சொன்னாள் கிருத்திகா ;
'' பையன் யாருன்னு கேக்கலியே நீ ?''
'' வேற யாரு ?....உன்னோட அந்த கல்கத்தா ஹீரோ ஷேகர் தானே !?''.....
'' நோ ...... குமார் !......அந்த மதுரைப் பையன் !'' மது சாவதானமாய் சொல்ல ......கிருத்திகாவுக்குள் ஆச்சரியமும் படபடப்பும் !
'' என்ன சொல்றே ? ஆர் யூ சீரியஸ் ?''
'' யா ......டேம் சீரியஸ் !.....கிருத்தி !.. இந்த நாலு நாளிலே என்னோட வாழ்க்கையிலே எவ்வளவு மாற்றங்கள்!....எஸ் ..அதுக்கு நீதான் காரணம் !''
'' ப்ளீஸ் ! என்னால தாங்க முடியலை !
புரியும்படியாய் சொல்லு '' ...
'' சொல்றேன் ! ....உன்னை மீட் பண்ணிட்டு வந்த வுடன் அப்பா , அம்மாகிட்ட .ஷேகர் பத்தியும்.., அவன் மீது எனக்கிருக்கும் லவ்வைப் பத்தியும் சொன்னேன் !.....உடனே பூகம்பம் வெடிச்சது எங்க வீட்ல !....கடுமையாய் போராடினதுல ...ஒரு வழியாய் சேகரை ஏத்துக்கிட்டாங்க !..அப்பா ..அவனைப் பற்றி கல்கத்தாவில இருக்கும் எங்க அத்தை கிட்ட விசாரித்ததுல அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவங்கர விஷயம் தெரிய வந்தது !. ஸோ. அவன் என்னை ஏமாத்த நெனச்சிருக்கான் !...ராஸ்கல் !.....தேங்க் காட் !.....கிருத்தி !.....அப்பா, அம்மாவைப் பத்தி ' நெகட்டிவாய்' திங்க் பண்ணி ..கடைசியில என்னோட வாழ்க்கையை ' நெகட்டிவ்வாக்கிக்க தெரிஞ்சேன் !.....நல்ல வேலை !,.....உன் மூலம் அந்த ஆண்டவன் என்னைக் காப்பாத்தினான் !! .''....
மனம் நெகிழ்ந்து போய் அவள் சொல்ல ...கிருத்திகாவின் மனமும் இப்போது பூரிப்பில் நிறைந்து போனது !....
தங்கம்கிருஷ்ணமுர்த்தி .......லண்டன்
.
ஆட்டோகாரனுக்கு பணத்தை எண்ணி கொடுத்து விட்டு , லக்கேஜ்களுடன் கிருத்திகா ஆட்டோவிலிருந்து இறங்கியபோது , அந்த ' அபார்ட்மெண்டின் ' வாட்ச்மேன் குப்தா அவளை நோக்கி மூச்சிரைக்க ஓடி வந்தான் ;
மறுகணம் அவளது முகம் ஏமாற்றத்தில் சுருங்கி போனது ; உள்ளுக்குள் பொங்கி வந்த எரிச்சலை வெளிக்காட்டாமல் அவனிடமிருந்து சாவியைப் பெற்றுக் கொண்டு, லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அவள் ; முதல் தளத்தில் அமைந்திருந்த தனது ப்ளாட்டை திறந்து உள்ளே சோபாவில் ' பொத்' தென்று விழுந்தவள் , ஆயாசத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்; கணவன் சிவராம் ஸ்டேஷனுக்கு வருவதாய் சொல்லி விட்டு வராமலேயே இருந்து விட்ட ஏமாற்றம் , இப்போது கோபமாய் உருமாற ........பிரயாண அசதியும் உடன் சேர்ந்து கொள்ள ...லேசாய் தலையை வலிக்கத் துவங்கியது அவளுக்கு இப்போது !...கூடப் பிறந்த அண்ணனின் திருமண நிச்சயதார்த்த விழாவை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோயமுத்தூர் சென்றிருந்தவள் , நேற்று இரவு அங்கிருந்து கிளம்பி சற்று முன்பு தான் வந்திருந்தாள் ;
' ச்சே ...என்ன மனிதர் ....ஒரு நாலு நாள் நான் ஊரில் இல்லாவிட்டால் இந்த அளவிற்கு அலங்கோலமாகவா வீட்டை வைத்துக் கொள்வது ' ...உள்ளுக்குள் அங்கலாய்த்தவாறே காபியைக் கலந்து கோப்பைக்குள் நிரப்பிக் கொண்டு அவள் ஹாலுக்கு வந்த போது செல்போன் அலறியது !...காப்பிக் கோப்பையை டீப்பாயில் வைத்து விட்டு , செல்போனைக் காதில் பொருத்திக் கொண்டாள் அவள் ; மறு முனையில் கணவன் சிவராமின் உற்சாகக் குரல் !
மறு கணம் கோபத்தில் படபடத்தாள் அவள்;
....... உங்களுக்காகத் தான் ஒன் அவராய் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன் !...எப்போ வரீங்க ?...'' அவளின் வார்த்தைகளை நிஜம் என்று நம்பிய சிவராம் மறு முனையில் ஆதங்கத்தில் பட படத்தான் ; .....
பதிலுக்கு அவளை சமாதானப் படுத்தும் விதமாய் , குரலை அதிகம் உயர்த்தாமல் அவன் ,
'' ப்ளீஸ் ..கிருத்தி !.........நா சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாய் கேளேன் !.....இன்னிக்கு சாட்டர்டே தானே !.. ஆக்சுவலி , ..ஐயாவோட பிளான் ...என்ன தெரியுமா ?..ஸ்டேஷனிலேருந்து உன்னை அழைச்சுட்டு வந்ததும் ......வீட்ல .'' ஹாயாய் '' ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு ...........அப்புறம் நிதானமாய் குளிச்சுட்டு ....ஹோட்டல் சரவணா போய் நாம ரெண்டு பெரும் லஞ்ச் சாப்பிடலாம்னு !.......ஹூம் .என்ன பண்றதுடா செல்லம் !.... ,,எல்லாம் ஸ்பாயில் ஆயிடுச்சு !கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாம நேத்து நைட் எங்க எம் .டி எனக்கு ' கால் ' பண்ணி என்னை இன்னிக்கு ஆபிசுக்கு வரச் சொல்லிட்டாரும்மா !....காலையில எட்டு மணிக்கே ஆபீஸ் வந்துட்டேன் !...என்னால ஸ்டேஷனுக்கு வர முடியாதுங்கற விஷயத்தை உன் கிட்ட சொல்லலாம்னு , உன்னோட மொபைலுக்கு காண்டாக்ட் பண்ணினேன் !...பட் , நீ ட்ரைன்ல இருந்ததால உனக்கு சிக்னல் கிடைக்கலை போல இருக்கு ! !....எஸ் ...சீரியசாய்மா !.........எம் .டி யோட ஒரு முக்கியமான மீட்டிங்க்ல இருந்ததால , இத்தனை நேரம் மொபிலை ஆப் பண்ணி வெச்சிருந்தேன் !....இப்ப தான் மீட்டிங் முடிஞ்சது !...ஆனா இன்னும் வொர்க் முடியலை !....இன்னும் ரெண்டு கிளையண்ட்ஸ் வேற வருவாங்க !....அநேகமா நைட் தான் வீட்டுக்கு வருவேன் ! !.....ச்சே !....பேசாம இந்த வேலைய ரிசைன் பண்ணிடலாம்னு கூட தோணுது !...லீவு நாளில கூட மனுஷனை ஜாலியாய் இருக்க விடாம !.....என்ன லைப் !......ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ச்டன்ட் மீ கண்ணம்மா .''....'' ..கெஞ்சுகிற தொனியில் பேசினான் அவன் ;
சிவராம் ஐ ,ஐ .டி யில் கம்ப்யூட்டர் படித்து விட்டு , மிகப் பிரபலமான கம்ப்யூட்டர் கம்பெனியொன்றில் பொறுப்பான பதவி வகிப்பவன் ; அவனுடைய சிரமம் கிருத்திகாவிற்கும் புரியாமலில்லை ; இருந்தாலும் மணமாகி நான்கே மாதங்கள் ஆகியிருந்த நிலையில் , விடுமுறை நாட்களைக் கூட விட்டு வைக்காமல் ..சதா சர்வ காலமும் ,வேலை வேலை என்று ஆபீசே கதி என்று அவன் பழியாய்க் கிடப்பது அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தியது ! ....அதிலும் .... கூடப் பிறந்த அண்ணனின் நிச்சயதார்த்த விழாவிற்கு கூட , வர முடியாமல் தான் மட்டும் போய் விட்டு வந்தது அவளது எரிச்சலை இரட்டிப்பாக்கியது ! .....பாவம் அவளும் ஆசாபாசங்கள் நிறைந்த சராசரி பெண் தானே ?
'' என்ன ஷிவா நீங்க !.....பொழுதன்னிக்கும் ஆபீஸ் ...எம் .டி .....அப்புறம் மீட்டிங் ....எப்ப பாரு .இதயே சொல்லுங்க !.....ஹூம் ..நீங்க ஸ்டேஷனுக்கு வந்திருப்பீங்கனு ஆசை ஆசையாய் எதிர்பார்த்து , ஏமாந்தது தான் மிச்சம் !....நீங்க தூங்கிட்டிங்களோனு நெனச்சு , ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்து பாத்தா , நீங்க ஆபீஸ் போயிருக்கரதாய் சொல்லி வாட்ச்மேன் குப்தா, வீட்டு சாவியை எடுத்து நீட்டறான் .....!'' அவளை மேற்கொண்டு பேச விடவில்லை சிவராம் ; உற்சாகமும் , படபடப்புமாய் ,
'' குட் .....அப்போ வீட்ல தான் இருக்கியா ?....சோ ச்வீட் !.......'' அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே , எம் .டி இடமிருந்து அழைப்பு வர ......'படக் ' கென்று ..மொபைலை ஆப் செய்து விட்டு ஓட்டமும் , நடையுமாய் எம். டி அறையை நோக்கி விரைந்தான் அவன் ; காலிக் கோப்பையை சிங்கில் போட்டு விட்டு , ....வாட்ச்மேன் குப்தாவிடம் சொல்லி வேலைக் காரி சரோஜாவை அழைத்து வரச் சொல்லலாம் என்று எண்ணியவாறே கிச்சனிலிருந்து வெளியே வந்தவளுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது சரோஜா ஒரு வாரம் லீவு போட்டு விட்டு மதுரை சென்றிருந்தது !..நாளை மறுநாள் தான் வருவாள் !.....மனச்சோர்வும் , உடல் அழர்ச்சியும் ..அவளை ஆட்கொள்ள சோபாவில் ஆயாசத்துடன் சாய்ந்து கொண்ட அக்கணம்............ மொபைல் அலறியது !..... சுவிட்சை ஆன் செய்தவள் , அடுத்த கணம் சந்தோஷத்துக்கு தாவினாள்!....மறு முனையில் அவளது ஆருயிர் தோழி மதுவின் குரல் !
..............................
..............................
..............................
அவளது வருகை அவள் மனதில் ஒரு புறம் மகிழ்ச்சியை அளித்தாலும் ....கூடவே கொஞ்சம் குழப்பத்தையும் உண்டு பண்ணியது !.....' என்னவாக இருக்கும் ?' ஒரு கணம் .
யோசித்தவள் ......பின் சுறுசுறுப்புக்குத் தாவினாள் !...!!........................
வாசலில் பெல் அழைக்க ....உற்சாகத்துடன் கதவைத் திறந்தவள் மறுகணம் சந்தோஷத்தில் முகம் மலர்ந்தாள் !.....எதிரே புன்னகையுடன் நின்றிருந்தாள் அவளது ஆருயிர்த் தோழி , மது ! அந்த நீல நிற ஜீன்ஸ் , ஒய்ட் கலர் டி . ஷர்ட் அவளுக்கு வெகு பாந்தமாக இருந்தது ! ; ' பம்' மென்று பரந்த கூந்தலை ' கிளிப் ' போட்டு அடக்கியிருந்தாள் அவள் ;
'' ஹேய் மது !...உனக்காகத் தான் காத்துக்கிட்டிருக்கேன் !.......வாடி உள்ளே !'' சுவாதீனமாய் அவள் கரங்களைப் பற்றியவாறு ....முகம் மலர அவளை வரவேற்றாள் கிருத்திகா ; .......எப்போதும் ' கல கல ' வென்று சிரித்துப் பேசிக் கொண்டு, துயரத்துக்கும் தனக்கும் வெகு தூரம் என்கிற மாதிரி இருப்பவள் மது ; ஆனால் கிருத்திகாவோ அவளுக்கு நேரெதிர் ! ....படு மூடி டைப் ; எவரிடமும் அத்தனை சுலபத்தில் பேசி விட மாட்டாள் ; கல்லூரி நாட்களில் மதுவிடம் மட்டும் சற்று நெருக்கம் உண்டு அவளுக்கு ; பட்டப் படிப்பு முடிந்த கையுடன் , கிருத்திகாவுக்கு திருமணம் முடிந்து விட ........மதுவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை ; மின் விசிறியை வேகமாக சுழல விட்டவாறே , கிருத்திகா ,
'' மேடம் ரொம்ப பிசி போல இருக்கு .....என் கல்யாணத்துக்குக் கூட வராம இருந்துட்டிங்க? . ''...'..பளிச் ' சென்று கண்ணடித்து , விகல்பமின்றி சிரித்த
வளுக்கு புன்னகையுடன் பதிலளித்தாள் மது ;
''....................'' வெரி சாரி கிருத்தி !...உன் கல்யாணத்தின் போது நான் ஊர்லையே இல்லடி !...கல்கத்தாவிலே இருக்கற எங்க அத்தை வீட்டுக்குன்னா போயிருந்தேன் ?......போன வாரம் தான் இங்கே வந்தேன் !.....அது போகட்டும் !...எப்டியிருக்கு உன் மேரீட் லைப் ?....'' கேட்ட மதுவுக்கு உற்சாகமாய் பதிலளித்தாள் கிருத்திகா ;
'' அப்டீன்னா நீ ?'' புருவம் முடிச்சிடக் கேட்டவளுக்கு புன்னகையுடன் பதிலளித்தாள் கிருத்திகா ;
'' ரெண்டு பேரும் தான் !......!... நெக்ஸ்ட் மந்த் எங்க அண்ணாவோட கல்யாணம் !.....அது முடிஞ்ச கையோட நாங்க ரெண்டு பேரும் யு . எஸ் கெளம்பறோம் ! ....எங்கேஜ்மென்ட் முடிஞ்சு இன்னி காலையில தான் கோம்புத்துர்லேருந்து வந்தேன் !...அது போகட்டும் !...நீ எப்போ கல்யாண சாப்பாடு போடப் போறே?''
மறு கணம் மதுவின் முகத்தில் வாட்டம் !
..''...கிருத்தி!... அது விஷயமாய் நான் உன் கிட்ட கொஞ்சம் மனம் விட்டுப் பேசணும்டி ''!....
''ஷ்யூர் ....!..ஒன் மினிட் மது !...உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன் !'' பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றவள் , அடுத்த ஐந்தாவது நிமிடம் .மணக்க , மணக்க ஏலக்காய் டீ சகிதம் அவளெதிரே அமர்ந்து கொண்டாள் ;
அடுத்த ஐந்தாவது நிமிடம் இருவரும் பார்க்கில் இருந்தார்கள் ; அன்று ' சாட்டர்டே ஆதலால் பார்க்கில் ஏகத்துக்கு கூட்டம் ; ஒரு ஒதுக்கு புறமான இடமாக பார்த்து இருவரும் அமர்ந்து கொண்டார்கள் ;
தலையைக் குனிந்தவாறு மணலை அளைந்தபடி எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கும் மதுவை கிருத்தியின் குரல் உலுக்கிப் போட்டது !
'' ஏன்..?''
' தெரப்பி ' ட்ரீட்மென்டிற்காக அடிக்கடி அவர் எங்க அத்தை வீட்டுக்கு வர ......நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்சானோம்!....நாளடைவில் அதுவே ..காதலாய் உருவாயிடுச்சு ! .....ஷேகர் ஒரு பக்கா ஜென்ட்ல்மென் தெரியுமா!....மென் ஆப் குட் குவாளிட்டியிஸ் !....இந்த நாலு மாச பழக்கத்துல அவரோட நகக் கணு கூட ஏன் மேல பட்டதில்லை தெரியுமா ? .......அத்தனை டீசன்ட் !'' '
'' அப்பா அம்மா கிட்ட சொல்ல வேண்டியது தானே அவரைப் பத்தி ? '' 'கிருத்திகா இயல்பாய் கேட்டாள்;
' பிரச்சனையே அங்கே தான் ஆரம்பம் !.....ஏன்னா அவங்க ரெண்டு பேரும் ரொம்ப கண்டிப்பான பேர்வழிகள் !....அங்கே நிக்காதே ...இங்கே நிக்காதே ......சுரிதாருக்கு மேல ..துப்பட்டா இல்லாம வெளியே போனா குத்தம் ......வெளியில போய்ட்டு கொஞ்சம் லேட்டாய் வந்தால் ஏன் லேட்டு....எதுக்கு லேட்டுன்னு ஆயிரம் கொஸ்டின்ஸ் !.....இவளவு ஏன் !.....நான் கல்கத்தாவிலே எங்க அத்தை வீட்ல இருக்கும்போது ..தினமும் போன் பண்ணி ஜாக்கிரதியாயிறுநு ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது என்கூட பேசுவாங்க !.....ஹூம் ..மூச்சுக்கு முன்னூறு அட்வைஸ் !.....அநியாயத்துக்கு ரொம்ப பழமையிலே ஊறிப் போனவுங்க !.....நான் ஷேகர் விஷயத்தை அவங்ககிட்ட சொன்னா கண்டிப்பாய் எங்க வீட்ல ஒரு பூகம்பமே வெடிக்கும் !..அவங்களோட பத்தாம்பசலித்தனமான கொள்கைகளை விட்டு அவங்களும் கண்டிப்பாய் இறங்கி வர மாட்டாங்க !......ஆனா அவங்களுக்காக நானும் என்னோட காதலை இழக்க தயாராயில்லை !என்ன ஆனாலும் ஷேகர் தான் என்னோட கணவர் !!....நாங்க ரெண்டு பேரும் ...எங்கேயாவது கண் காணாத இடத்துக்குப் போய் கல்யாணம் பண்ணிட்டு வாழரதத் தவிர வேற வழியே தெரியலைப்பா எனக்கு !''.......படபடவென்று பொரிந்து தள்ளியவளின் இடையே குறுக்கிட்டாள் கிருத்திகா ;
'' பட் ...ஒரு சின்ன திருத்தம் !....என்னோட எதிர்காலத்தை நானே நிர்ணயிச்சுக்கரதாய் டிஸைட் பண்ணிட்டேனு சொல்றது தான் கரெக்ட் !.....ஆமா .....?என்னோட மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையைத் தேடித் போறதுக்குப் பேர் ' ஓடிப்போரதுன்னு ' அர்த்தமா என்ன ?.......சர்டான்லி நாட் !.கிருத்தி !.....ஐ வான்ட் டு க்ளீயர் ஒன் திங் !....ஷேகர் மேல எனக்கு இருக்கற அளவுக்கதிகமான காதல்ங்கறதை விட .....என்னைப் பெத்தவங்களோட அந்த ' டாமினேட்டிங் ' பீகேவியர் தான் என்னை இப்படி வெறுப்பாய் பேச வைக்குது ! ... ச்சே ..காலத்துக்கேத்தார் போன்று இளைய தலை முறையினரை அனுசரிச்சுண்டு போற மனப் பக்குவம் அவங்களுக்கு துளி கூட கிடையாது !. அவங்களோட பீலிங்க்ஸ்களுக்கு மதிப்பே தருவது கிடையாது ! ஸோ ,என்னோட இந்த அதிரடியான முடிவு மூலம் ....என்னோட இன்டிவிசுவாலிட்டியை 'ப்ருவ் ' பண்ணினா மாதிரியுமாச்சு !...என்னோட மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை நானே தேடிக்கிட்டா மாதிரியுமாச்சு !..எனக்கு இதத் தவிர வேறு வழி தெரியலைப்பா ! ''
எண்ணையில் விழுந்த கடுகாய் படபடவென்று பொரிந்தாள் மது ; மறு கணம் வாய் விட்டு சிரித்தாள் கிருத்திகா;
'' கூல் மது !.......நவ் ஐயம் வெரி கிளியர் ! ......டு பி பிராங்க் , ...நீ உன்னோட பெற்றோர்களைப் பழி வாங்கரதாய் நெனச்சுக் கிட்டு உன்னை நீயே ஏமாத்திக்கரே !....அது தான் உண்மை !.யூ நோ மது !.... அவங்க உன் மீது காட்டுவது ஆத்மார்த்தமான அன்புமா !....ஆளுமைத்தன்மை இல்லை !.. அவங்களுக்கு ...உன் மீது கரிசனமும் அக்கறையும் நிறையவே இருக்கு !...ஆனா என்ன ஒண்ணு! ...அதுல கண்டிப்பும் , கறாரும் கொஞ்சம் துக்கலாவே இருக்கு !..வயசுப் பொண்ணு வழி தவறிப் போய் விடக் கூடாதேங்கற வாஞ்சை நிறையவே இருக்கு !!...மது ! ...
...... ...உன்னோட மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கைத் தேடிப் போறதாய் நீ நெனைக்கிறே !.... ஆனா , இந்த ஊர் , உலகத்தோட பார்வையில் நீ '' ஓடிப்போனவள் ''தான் !....ஓடிப் போனவளோட அப்பா, அம்மாநு தான் அவங்களுக்கு பேரு ! ! அது அவங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம் ? நா தான் தெரியாம கேக்கறேன் ...தப்பு பண்றது நீ !...தண்டனை அவங்களுக்கா ?......எதற்காக அவங்களுக்கு இந்த தண்டனை ?.....உன்னை பெத்து வளர்த்து ஆளாக்கி உன் மீது கலப்படமற்ற 'அக்மார்க் ' அன்பு செலுத்தியதற்காகவா?...அதுக்காக ' காதல்' ங்கறது தப்பான வார்தைன்னோ ....' காதலிக்கிறது தப்பான செயல்னோ சொல்ல வரலை !.....முடிஞ்ச வரைப் போராடிப் பார்த்துட்டு .....ஜெயிக்கலைன்னா ..போராடினோம்ங்கர திருப்தியாவது கிடைக்கும் இல்லையா?........இளமை மதமதப்பில்... பின் விளைவுகளை யோசிக்காமல் நாம செய்யற காரியங்கள் பிற்பாடு நமக்கே பல இன்னல்களை உருவாக்கும் !.......இருபதுகளில் ஒரு வகை வாழ்க்கை வாழ்ந்துட்டு அப்புறம் அறுபதுகளில் அதை நெனச்சு வருத்தப் படருதுல எந்த பிரயோஜனமும் இல்லை ! மது !...பாசிட்டீவாய் திங்க்...பண்ணுப்பா !.உங்க அப்பா ,அம்மா கிட்ட மனம் விட்டு பேசு !.....கண்டிப்பாய் ஒரு நல்ல வழி பிறக்கும்..எதுவுமே நாம அப்ப்ரோச் பண்ற விதத்தில தாம்ப்பா இருக்கு !.''
..கிருத்திகா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் , மதுவின் மனதில் பம்பரமாய்ச் சுற்றி சுற்றி சுழன்று கொண்டிருக்க .....ஒரு விதத்தில் அவள் கூறுவது நியாயம் என்று கூட பட்டது அவளுக்கு; அப்போது சிவராமிடமிருந்து போன் வரவே இருவரும் வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.
அன்று வெள்ளிக்கிழமை ; பகல் சாப்பாட்டிற்கு பின் டி.வி சீரியலுடன் ஒன்றிப் போயிருந்த கிருத்திகா, செல்போனின் அலறலுக்கு செவி சாய்க்கும் விதமாய் அதனை எடுத்து காதில் பொருத்திக் கொண்டாள் ; மறு முனையில் மதுவின் அட்டகாசமான குரல் !
'' யா ......டேம் சீரியஸ் !.....கிருத்தி !.. இந்த நாலு நாளிலே என்னோட வாழ்க்கையிலே எவ்வளவு மாற்றங்கள்!....எஸ் ..அதுக்கு நீதான் காரணம் !''
புரியும்படியாய் சொல்லு '' ...
மனம் நெகிழ்ந்து போய் அவள் சொல்ல ...கிருத்திகாவின் மனமும் இப்போது பூரிப்பில் நிறைந்து போனது !....
தங்கம்கிருஷ்ணமுர்த்தி .......லண்டன்
.